சினிமா, ஒரு காட்சி ஊடகம். பல முறை அது ஒரு காட்சிப்பிழை ஊடகமாகவே சித்தரிக்க படுகிறது. சினிமாவை பார்த்து ரசித்து, பாராட்டி, நமக்கு பிடித்த நாயகனை நமது வாழ்க்கை நாயகனாக பாவித்து கொண்டாடி வருகிறோம். இப்படிப்பட்ட பின்பங்களையும் மீறி நம்மை திரைக்கு வந்து பார்க்க சொல்லுவது நல்ல கலைஞர்கள். நன்றாக நடிக்க வந்தால் மட்டும் நல்ல நடிகனாக முடியாது. நமது இயல்பையும் மீறி நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க செய்பவன் மட்டுமே நல்ல நடிகனாக மக்கள் ஏட்டுக்கொள்வார்கள். இப்படிப்பட்ட காட்சிப்பிழைகளை நீக்க வந்தவர் தான் “உலகநாயகன் கமலஹாசன்.”
இன்று உத்தமவில்லன் பார்த்து ஒரு வித தாக்கத்துடன் இந்த பதிவை இடுகிறேன். கமல் நன்றாக நடிக்கிறார் என சொன்னால் அது சிறுபிள்ளைத்தனம். அவரை ஏன் நல்ல நடிகர் என சொல்கிறோம் என்பதை ஒவ்வொரு படத்திலும் மனுஷன் காட்டிவிடுகிறார். முதலில் இந்த படத்தில் பிடித்தது அதன் ஒன் லைன் கதை. அல்லது நிஜ கமலஹாசனின் வாழ்க்கையில் நடந்த தாக்கத்தின் ஒரு சிறு பதிவு. நாம் நினைக்கும் வெற்றி நாயகர்கள் அனைவரும் செல்வத்தில் திளைத்து மகழ்வுடன் உள்ளனர் என்று தப்பு கணக்கு போட்டுள்ளோம். அப்படிப்பட்ட நடிகனின் வாழ்க்கை பதிவு. சினிமாவை ஒரு பொழுதுபோக்காக இல்லாமல் அதை தாண்டி ஆராய்பவன் நான். எந்த படம் வந்தாலும் அதில் பனி புரிபவர்கள், கடன் கொடுத்த வங்கிகளின் பெயர் மற்றும் கிளை, படம் எடுக்க உறுதுணையாக இருந்தவர்கள், ஏடுக்கப்பட்ட ஊர்கள் போன்ற (வேண்டாத) விஷயங்கள் என் கண்ணில் படும். ஒரு இயக்குனர் ஏப்படி கதை சொல்லுவார் ஏன நிறைய முறை யோசித்திருக்கிறேன். பொதுவாக ஒன் லைன் என்பார்கள். அப்படிப்பட்ட ஒன் லைன்ஐ கமல் பாலச்சந்தரிடம் ஒரு நிமிடத்தில் சொல்லும் போது இனிமேல் ஒன் லைன் ஏன்றால் இதுதான் பெஞ்ச்மார்க்காக இருக்கும். ஒரு நடிகன், அவனுடைய வாழ்க்கை, விருப்பம், ஆசை, (கள்ள)காதல், பாசம், வெறுப்பு, இயலாமை, தவறு, மனிதாபிமானம் என வாழ்வியல் குணங்கள் அனைத்தையும் கமல் கொட்டி தீர்த்திருக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு ஹீரோக்கு மட்டும் இந்த குணங்களை காட்டாமல் அவனோடு வாழும் அணைத்து மனிதர்களின் குணாதிசயங்களை வெளிபடுத்தி உள்ளார்கள். இதில் வரும் ஆனைவரும் அவர்களது பார்வையில் நல்லவர்களே, உத்தமர்களே, இது தான் சிறப்பு. Everyone is a hero and a Villan too. ஒரு மனிதனின் வாழ்வில் வரும் Middle Age Crisis போல, ஒரு மனிதனின் Family Crisisஐ பதிவு செய்வதில் வல்லவர் கமல் என்பதை மகாநதி படமும், இந்த உத்தமவில்லன் படமும் உணர்த்தும். அவன் செய்த தவறு, செய்ய தவறிய கடமை, காப்பாற்ற முடியாத உறுதிமொழி, பிறர் செய்த சூழ்ச்சி, போட்டி பொறமை, ஈகோ என எண்ணற்ற சிக்கல்களை சிறிய காலத்துக்குள் அவர் சரி செய்ய முயல்வதும், தனக்கு திருமண வயதில் ஒரு மகள் இருப்பது தான் சாகப்போகிற நேரத்தில் தெரிவதும், தன் மகளையும், மதிக்காது போல் இருக்கும் மகனையும் ஏதிர்கொள்வதும் கமல் கமல் தான். Simply Classy. இன்றைய வாழ்வியல் சூழல்களில் பிரச்னை பிறரிடம் மனம் விட்டு பேசாததுதான். தான் வளர்த்த ஒருவன், நேசித்த ஒருவன் கடைசி காலத்தில் இறக்க உள்ளதாக வந்து கூறும்போது தன் ஈகோவை உடைத்து எறிந்து பாலசந்தர் கதறுவதும், கமல் தன் மகனிடமும், மகளிடமும், கடந்த காலத்தை புரிய வைப்பதும், அவகளது உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதும் “A Big Salute to Kamalhaasan”. அங்கங்கே சிறு சிரிக்க வைத்தும், சிலேடை மொழி பேசியும், போகிற போக்கில் அரசியலையும், தணிக்கை துறையையும் வாரி விடுவது அக்மார்க் கமல் ஸ்டைல். இன்னும் ஏன் இந்த இந்து மதத்தையும் அதன் சைவ, வைணவ பிரிவுகளையும் சாடுவது ஏனோ. (பாடல் வரிகளை மற்றும் ஒரு சில காட்சிகளை கவனமாக பார்க்கவும்). இன்னும் இந்த மனுஷனுக்கு வயசாகலை போல. என்ன ஒரு Stylish – பார்க்க Single Kiss Song. இந்த படத்தில் வரும் கதா பாத்திரங்களும் அதன் தேர்வும் Casting தரத்தை வேற இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதில் வரும் அணைத்து பாத்திரங்களும் உத்தமர்களே. சூழ்நிலைகள் எப்படி வில்லனாக ஆக்குகிறது என்பதை இதைவிட நளினமாக சொல்ல முடியாது. பல வாழ்வியல் சிக்கல்களுக்கு வழி தெரியாமல் தவிக்கும் இன்றைய சமூகத்துக்கு பல விடைகளை சொல்லியும், ஒரு விஷயத்தை அணுகும் விதத்தை சொல்லியும் தெளிவு படுத்துவது திரைக்கதை. நான் படம் பார்த்த Woodlands அரங்கில் பாதி காலி நாற்காலிகள் இருந்தது இந்த படத்திற்கு ஒரு பின்னடைவுதான். மகாநதி, குணா, குருதிப்புனல், அன்பேசிவம், ஆரண்ய காண்டம் போன்ற படங்களை திரை அரங்குளை விட்டு போன பிறகு Classic லிஸ்டில் சேர்த்து 10 வருடங்கள் கழித்து சிலாகிப்பது நமக்கு வழக்கம் தான். இதற்கும் அதுதான் நேர்ந்துவிட்டது. இவ்வளவு நடந்தும் கமல் அவர்களை இது போன்ற Experimental Films ஏடுக்க வைப்பது அவரின் தீராத்திரை தாகம் தான் என்பதில் ஐயமில்லை. சிறிது தொய்வு இருந்தாலும் படம் முடிந்தும் 2 நிமிடம் இருக்கையை விட்டு எழாமல் செய்தது உத்தமவில்லன். வெளியே வந்து பஸ் பிடித்து டிக்கெட் கேட்ட பொழுது கண்டக்டர் சில்லறை கேட்பாறோ என நினைத்து சில்லறை இல்லை என சொன்னேன் உடனே சற்றும் யோசிக்காமல் “பரவாயில்லை சார்” என அந்த கடைசி டிருப்பிலும் சிரித்தவாறு சொன்ன கண்டக்டர் “உத்தமனாக” தெரிந்தார், அற்ப்பமாக சில்லறை இருந்தும் கொடுக்காத நான் வில்லனாக தெரிந்தேன். இதான் “உத்தமவில்லன்” கதை. “சாகா வரம் போல் சோகமும் உண்டோ, தீரா கதையை கேட்பார் உண்டோ” – இந்த கதை இங்கு முடிந்தது. பக்கும் பக பக பக.
0 Comments
|
Archives
November 2016
AuthorVignesh Viswanathan. |