பொதுவாக குறும்படங்கள் என்றால் ஏதார்தமாக இருக்கும், சில நம் அன்றாட வாழ்வின் பதிவுகளை தாங்கி நின்று தொட்டுச்செல்லும். இன்றைய கார்த்திக் சுப்புராஜ் காலத்தில் வாரம் 10 குரும்படங்கள் Youtubeல் அப்லோட் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட சிலவற்றை பார்த்த பொழுது என் கண்களுக்கு சிக்கியதுதான் "தி எல்லோ பெஸ்டிவல்" (The Yellow Festival") என்ற எதார்த்தமான குறும்படம். ஒரு பெண்ணிற்க்கு நடக்கும் பூப்புனித நீராட்டு விழா பற்றிய படம். இன்றைய சமூகத்தில் கல்வியறிவு வளர்ச்சி என்பது உயர்ந்துவருகிறது. பொதுவாக தம் பிள்ளைகள் தங்களைக்காட்டிலும் கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதுதான் பெற்றோர் விருப்பம். “எங்க அப்பாவும், அம்மாவும் ஒரே மக்கு, ஒன்னுமே தெரியாது” என்று நம் குழந்தை மட்டம் தட்டி பேசும்போது அதை கண்டு சிரித்து சந்தோஷப்படுபவர்கள் தான் பெற்றோர்கள். பாராட்டி, சீராட்டி, கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து (கெடுத்து) வளர்க்கும் நம் பிள்ளைகளுக்கு கொஞ்சம் அனுபவ அறிவையும் வளர்த்தால் என்ன? இவை ஒரு Life Cycle தான். நம் பாட்டி மின்சாரம் பார்த்ததில்லை, நம் அப்பா மொபைல் போன் பார்த்ததில்லை. இப்படி பல சூழலில் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் இருப்பது நிறைய. இந்த குறும்படத்தில் முன்வைக்கப்படும் ஒரு விவாதம் நம் சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஏன் கடைபிடிக்க வேண்டும், அதன் அவசியம் என்ன? புது தொழில்நுட்பங்களை பழகிய நாம் இன்னும் நம் பழக்கவழக்கங்களை மாற்றாமல் இருப்பது ஏன்? இந்த படத்தின் மைய கருவான பூப்புனித நீராட்டு விழாவும் அதனோடு நடக்கும் குடும்ப சம்பவங்களும் ஒரு இயல்பான பதிவு. ஒரு காட்சியில் சிறுமி பழைய சம்பிரதாயங்கள் பிடிக்காமல் தனக்கு இந்த விழா வேண்டாம் என பெற்றோரிடம் மன்றாடுவதும், தாய் என்ன ஆனாலும் இந்த விழாவை நடத்தியே தீருவது என முடிவெடுப்பதும், அதற்க்கு காரனமாய் அவள் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களும் ஒரு தலைமுறை போராட்டம். இன்று வயதான பெற்றோரை பிள்ளைகள் ஒதுக்கும் இந்த சமூகத்தில் பல குழ்ந்தைகளுக்கு தங்கள் பாட்டி, தாத்தாக்களின் அன்பும், அறிவுரையும், பெரியோர்களின் வழிகாட்டுதலும் எவ்வளவு முக்கியம் என்பதை அந்த பாட்டி கதாப்பாத்திரம் நச்சென்று சொல்கிறது. உண்மையில் அவர் ஒரு பாட்டி அல்ல லூட்டி – சிறந்த கதாப்பாத்திர தேர்வு. இவ்வளவு சொல்லியாச்சு கடைசியா ஒருத்தர் ஞாபகம் வரணுமே? ஆமாங்க அவருதான் அந்த பாவப்பட்ட ஆண்மகன் வீட்டின் தலைவன் அப்பா. தன் மகளுக்கு செல்லம் காட்டுவதிலும், தன் மனைவியிடம் விஷயங்களை பகிர்ந்துகொள்வதிலும், அவள் உறவினர்களை நாசூக்காக கிண்டல் செய்வதிலும், தன் மகள் அளவுக்கு மீறி பேசும்போது கண்டிப்பதிலும் மனுஷன் அருமை. “என்னப்பா நீங்க இப்படி பன்னிடீங்களே ப்பா”. மொத்தத்தில் நாம் குடும்பத்துடன் காண வேண்டிய பெரும்படம் இந்த குறும்படம்.
0 Comments
|
Archives
November 2016
AuthorVignesh Viswanathan. |